Advertisment

எங்களிடம் அதிநவீன ஆயுதங்கள் உள்ளன... ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு ஒரே நாளில் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisment

மேலும் இன்றும் இந்த விலையேற்றம் தொடர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் விமான படையினர் இன்று ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க விமானம் பறக்க தற்போது அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், " அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுதொடர்பாக நாங்கள் ஆய்வு செய்து வருகின்றோம். எங்களிடம் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன. ஆல் இஸ் வெல்" என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment
trump
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe