Skip to main content

நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழப்பு; காரணம் என்ன?

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

All five passengers in the submarine lost their lives; What is the reason?

 

ஹாலிவுட் சினிமா மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிந்த ஒன்று டைட்டானிக் கப்பல் மூழ்கிய விவகாரம். 1912 ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

 

கடலில் மூழ்கிய கப்பல் அமெரிக்காவில் உள்ள நியூ ஃபவுண்ட்லாந்த் தீவுக்கு அருகே சுமார் 740 கிமீ தொலைவில் மூழ்கியிருப்பது 1985 ஆம் வருடம் கண்டறியப்பட்டது. கப்பலை தரைக்கு கொண்டு வர முடியாததால் ஆய்வாளர்களும், பழம் பொருட்களை சேகரிப்பவர்களும் தங்களது தேவைக்கேற்ப கடலுக்குள் சென்று கப்பலை பார்வையிட்டு வருகின்றனர்.

 

கடந்த சில மாதங்களாக டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக ஓசன்கேட் என்ற நிறுவனம் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை வடிவமைத்தது. இக்கப்பல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாரி அளவிலான இந்த கப்பலில் 5 பேர் வரை பயணிக்க முடியும். இக்கப்பலில் 4 நாட்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும். 

 

டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் சுற்றுலா 8 நாட்கள் பயணத்தை அடிப்படையாக கொண்டது. இந்த சுற்றுலாவுக்கு கட்டணமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஜூன் 18 ஆம் தேதி காலை 9 மணியளவில் நீர்மூழ்கிக் கப்பல் கடலில் இறக்கப்பட்டது. அக்கப்பலில் ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனரும், நீர்மூழ்கிக் கப்பலின் மாலுமியும், பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரும், பாகிஸ்தான் தொழிலதிபர் ஒருவரும் அவரது மகனும் என மொத்தம் 5 பேர் பயணித்துள்ளனர்.

 

நீர்மூழ்கிக் கப்பல் கடலில் இறக்கப்பட்ட ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் நீர்மூழ்கிக் கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கப்பல் மாலை 6.10 மணியளவில் கடலின் மேற்பரப்புக்கு வருவதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்திற்குள் கப்பல் திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு வந்த கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மீட்புக் குழுவினர் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

 

கப்பல் மூழ்கிய பகுதி மிக ஆழமான பகுதி எனவும் வானிலை மிக மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவ்வளவு ஆழத்தில் இருக்கும் கப்பலை மீட்க தேவையான உபகரணங்கள் இருநாடுகளிடமும் இல்லை எனக் கூறப்பட்டு இருந்தது. இருநாட்டு மீட்புக் குழுவினரும் மோசமான வானிலையிலும், கப்பலில் உள்ளவர்களுக்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைவான கால அவகாசத்துடனும் போராடி வந்தனர்.

 

ஓரிரு தினம் முன் ஆழ்கடல் கண்காணிப்பு விமானம் மற்றும் சோனார் கருவிகளில் ஆழ்கடல் பகுதியில் இருந்து கேட்ட சத்தம் பதிவானது. எனவே அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நீர்மூழ்கிக் கப்பலை மேலே கொண்டு வரும் சாதங்களும் கப்பல் மூழ்கிய பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. எனினும் கப்பலை மீட்க முடியவில்லை. 

 

நீர்மூழ்கிக் கப்பலில் பழுது ஏற்பட்டால் நீரில் மூழ்கியில் இருக்கும் ஆக்ஸிஜன் 96 மணி நேரத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கினால் அது கடலின் மேற்பரப்புக்கு வர பலூனை வெளியேற்றும் பைப், மணல் பைகள் உட்பட 7 விதமான சாதனங்கள் கப்பலில் உள்ளன. அப்படி இருந்தும் கப்பல் மேலே வராததால் கப்பல் வெடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  1600 அடி ஆழத்தில் கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.