Skip to main content

மீனவர் வலையில் சிக்கிய அரியவகை மீன்... எதேச்சையாக நடந்த அதிசயம்...

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

புளூ ஹேலிபட் என்ற மீனை பிடிக்க முயற்சி செய்த ஒருவருக்கு தூண்டிலில் அறிய வகை மீன் ஒன்று மாட்டியுள்ள சம்பவம் நார்வே நாட்டில் நடந்துள்ளது.

 

alien like fish caught in norway

 

 

நார்வே நாட்டில் நார்டிக் சீ ஆங்கிளிங் என்ற மீன்பிடி நிறுவனத்தில் வழிகாட்டியாக பணிபுரிந்து வருபவர் ஆஸ்கார் லுன்டால் என்ற 19 வயது இளைஞர். இவர் புளூ ஹேலிபட் என்ற மீனை பிடிப்பதற்காக கடலுக்குள் தனது குழுவுடன் படகில் சென்றுள்ளார். அப்போது அந்த மீனை பிடிப்பதற்காக தூண்டிலிட்டு காத்துக்கொண்டிருந்த அவரின் தூண்டிலில் பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த மீனை வெளியே எடுத்து பார்த்த அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.

ஏனென்றால் மிகப்பெரிய கண்கள், வாய் ஆகியவற்றை கொண்ட ஒரு புதிய வகை மீனை அவர் பிடித்திருந்தார். இந்த அரிய மீனை புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், இது ரேட்பிஷ் எனும் அறிய வகை மீன் எனவும், கடலின் அடியில் வாழ்வதால் இதனை பிடிப்பது அதிசயமான ஒன்று எனவும் கூறியுள்ளனர். கடல் ஆழத்தில் இருளிலும் காண்பதற்கு வசதியாக இவ்வளவு பெரிய கண் அவற்றுக்கு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஏலியன் போன்ற வித்தியாசமான உருவ அமைப்பு உடைய இந்த மீன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Nobel Prize for Literature Announcement

 

2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு கடந்த 2 ஆம் தேதி அறிவித்திருந்தது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் எம்.ஆர்.என்.ஏ (mRNA) வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று முன்தினம் (03.10.2023) அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று (04.10.2023) அறிவிக்கப்பட்டது. அதன்படி வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் இ.புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ.எகிமோவ் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்துத் தொகுத்ததற்காக நோபல் பரிசு வழங்குவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, நார்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் ஃபொஸ்ஸே என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடகம் மற்றும் உரைநடையில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இந்த பரிசு வழங்குவதாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு தேர்வு குழு அறிவித்துள்ளது. 

 

 

Next Story

சூர்யா பாராட்டிய படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவுக்கான நார்வே தூதர்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Norwegian Ambassador to India said Mrs Chatterjee Vs Norway movie is factual inaccuracies

 

அஷிமா சிப்பர் இயக்கத்தில் ராணி முகர்ஜி நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே'. ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் இன்று (17.03.2023) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஒரு தம்பதி வேலைக்காகத் தனது இரண்டு குழந்தைகளுடன் நார்வே நாட்டிற்குச் செல்கின்றனர். அங்கு அவர்களின் இரண்டு குழந்தைகள் சரியாக வளர்க்கப்படவில்லை எனக் கூறி அங்குள்ள ஒரு குழந்தைகள் அமைப்பு எடுத்துச் சென்று விடுகிறது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் இந்தியாவுக்கான நார்வே தூதர் ஹான்ஸ் ஜேக்கப் ஃப்ரைடன்லண்ட் (Hans Jacob Frydenlund), இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில் "இப்படம் குடும்ப வாழ்க்கையில் நார்வேயின் நம்பிக்கையையும் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கான மரியாதையையும் தவறாக சித்தரிக்கிறது. குழந்தை நலன் என்பது ஒரு பெரிய பொறுப்பான விஷயம். பணம் அல்லது லாபத்தால் உந்துதல் பெறாது" எனப் பதிவிட்டுள்ளார். 

 

இந்த பதிவை படத்தின் தயாரிப்பாளர் நிக்கில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விளக்கமளித்துள்ளார். அதில் "இந்தியாவின் கலாச்சாரம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெரியோர்களால் கற்றுத் தரப்படுகிறது. கலாச்சாரா ரீதியாக விருந்தினரை அவமானப்படுத்தும் நோக்கம் நமக்கு கிடையாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.