Skip to main content

அல்பேனியாவில் நிலநடுக்கம்: 16 பேர் பலி

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

அல்பேனியாவின் தலைநகர் திரானாவில் இருந்து 30 கி.மீ. வடமேற்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரவில் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக தெருக்களில் குவிந்தனர்.



இந்த நிலநடுக்க பாதிப்பினால் திரானாவில் இருந்து வடக்கே 36 கி.மீ. தொலைவில் அமைந்த துமனே நகரில் இருந்த கட்டிடங்களும் குலுங்கின.  கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சிக்கி ஆண் மற்றும் பெண் என 16 பேர் பலியாகியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Powerful earthquake in Sri Lanka

 

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தெற்குப் பகுதியில் கடலின் நடுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.2 என சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகி உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

டெல்லியில் நிலநடுக்கம்

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

Earthquake in Delhi

 

டெல்லியில் திடீரென ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி என்.சி.ஆர், ஆக்ரா, சஜ்ஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு காணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 3.1 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.