Skip to main content

புகைப்பதனால் ஏற்படும் மரணங்களைவிட காற்று மாசினால் ஏற்படும் மரணங்கள் அதிகம்... அதிர்ச்சி தரும் சர்வே ரிப்போர்ட்

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

புகைப்பதால் ஏற்படும் மரணத்தைவிட காற்று மாசினால் ஏற்படும் மரணங்கள் அதிகமாக இருக்கிறதென சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

 

air pollution

 

ஜெர்மனியில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 2015-ல் காற்று மாசினால் 8.8 மில்லியன் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அதற்குமுன் 4.5 மில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காற்று மாசினால் ஏற்படும் மரணத்தின் விகிதம் இரட்டிப்பாகியுள்ளது என்பது அச்சத்துக்குரிய விஷயமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் புகைப்பதால் ஏற்படும் மரணம், வருடத்திற்கு 7 மில்லியன் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இதைவிட காற்று மாசினால் ஏற்படும் மரணத்தின் விகிதம் அதிகாமாக உள்ளது என்பது அச்சத்தைக்கூட்டுகிறது. 
 

ஐரோப்பாவில் மட்டும் 7,90,000 மரணங்கள் காற்று மாசினால் ஏற்பட்டுள்ளது. இதில் 40% முதல் 80% வரையிலான மரணங்கள் இதயம் சார்ந்த மரணங்களாக இருக்கிறது. உலகம் முழுக்க காற்று மாசால் ஆண்டுதோறும், 1,00,000 பேரில் 120 பேர் மரணிக்கின்றனர். அதேசமயம் ஐரோப்பாவில் 1,00,000 பேரில் 200 பேர் மரணிக்கின்றனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

 

இந்த ஆய்வை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆய்வு குழுவின் ஆய்வாளர்களில் ஒருவரான தாமஸ் முன்சல், “காற்று மாசினால் ஏற்படும் மரணங்கள் புகைப்பதானால் ஏற்படும் மரணங்களைவிட அதிகமாக இருக்கிறது. புகைப்பிடிப்பது என்பது தவிர்க்கக்கூடியது. ஆனால், காற்று மாசு என்பது...?” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போகி கொண்டாட்டம்; புகை மண்டலமாக மாறிய சென்னை

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Chennai turns into a smoke zone due to bhogi celebrations

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருவிழாவின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது போகி. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும்.  அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது. 

சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் அது மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. மேலும் கடும் புகையினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Next Story

சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு!

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Air pollution has reached high levels in Chennai
கோப்புப்படம்

 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். 

 

இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அறிவுறுத்தியிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல் ஆணையம் தனிப்படையையும் அமைத்திருந்தது. 

 

இந்த நிலையில் மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்ததன் காரணமாகச் சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்ததன் மூலம் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு அபாயகரமான சூழலை எட்டியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 322 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியிருக்கிறது. வேளச்சேரி - 308, அரும்பாக்கம் - 256, ஆலந்தூர் - 256, ராயபுரம் - 232 என பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 ஐ தாண்டியுள்ளது. இதனால் அதிக பாதிப்பு மற்றும் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 141 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.