Skip to main content

செய்தி வாசிப்பாளர்களுக்கு வந்த சோதனை....

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
news reader


தற்போதைய உலகில் மனிதன் செய்யும் வேலைகளை ரோபோக்கள் வைத்து செய்துவரும் அளவிற்கு தொழில்நுட்பம் உயர்ந்துவிட்டது. அதுபோல சீனாவில் உலகிலேயே முதன் முறையாக செய்தி வாசிப்பதற்காக ஏஐ ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 

இந்த செய்தி வாசிக்கும் ஏஐ ரோபோவை சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோக்கள் பார்ப்பதற்கு சீன செய்தி வாசிப்பாளர்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. மேலும், இந்த ரோபோக்கள் முன்னே எழுதப்பட்டிருக்கும் செய்திகளை அச்சுபிசிறாமல் படிக்கும் அளவுக்கு தொழில்நுட்பங்களை புகுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகளுக்கு ஏற்றவாறும் வாயை அசைக்கின்றன.
 

சீன மற்றும் ஆங்கில மொழியில் செய்திகளை வாசிக்க இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் சோற்வின்றி தொடர்ந்து பணி புரியும், எந்த ஒரு செய்தியையும் தடுமாறாமல் படிக்கும், மற்ற ஏஐ ரோபோக்கள் போன்று சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல், செய்திகளை வாசிக்க மட்டுமே செய்யும்” என்று இந்த ரோபோக்களை உலகிற்கு அறிமுகம் செய்த சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

சீனாவில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடந்த உலக இணைய மாநாட்டில் இந்த செய்தி வாசிக்கும் ஏஐ ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த வகை ரோபோக்கள் எப்போது தினசரிப் பயன்பாட்டிற்கு வரும் என்பது தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று போட்டிப்போட்டு சீனா இதுபோன்ற ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளது. ஆனால், இதுபோன்ற ரோபோக்கள் அனைத்து நாடுகளிலும் நடைமுறைக்கு வந்தால் செய்தி வாசிப்பாளர்களின் வேலை வாய்ப்பு என்ன ஆவது?
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கல்வித்துறையில் மற்றொரு சாதனை; தனியார் பள்ளியின் புதிய முயற்சி!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Private school's introduced AI teacher in kerala

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 

அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில்  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிக்காக ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஐரிஸ்’ (IRIS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. 

3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் திறன் கொண்ட இந்த ரோபோவின் கால்களுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் மூலம், ரோபோ ஆசிரியர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்ல முடியும். இந்த ரோபோவை ‘மேக்கர்ஸ் லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.