தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை திருப்பி அடித்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர்...

ghjgjgj

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடைபெற்ற 48 மணி நேரத்திற்குள் அதே போன்ற ஒரு தாக்குதல் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டிலும் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அதற்கான எதிர் தாக்குதலையும் நடத்தி அந்த தீவிரவாதிகளை அங்கேயே கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பர்யாப் மாகாணத்தின் கர்ஜிவான் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடிகள் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். இருப்பினும் சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த மீதி 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Afganishtan pulwama attack terrorism
இதையும் படியுங்கள்
Subscribe