Skip to main content

'ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை'- தலிபான் அமைப்பு அறிவிப்பு!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

afganisthan peoples kabul airport Newyork times

ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள தலிபான் அமைப்பு , கடந்த கால ஆட்சியை போல இம்முறை தங்கள் ஆட்சியில் கெடுபிடிகள் இருக்காது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், அங்கிருந்து ஆப்கான் மக்கள் வெளியேறுவதில் மும்முராக இருக்கிறார்கள். 

 

அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், ஆப்கானிஸ்தானில் வீடு வீடாக தேடப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றன. இப்படி, பல்வேறு செய்திகளுக்கு மத்தியில், நியூயார்க் டைம்ஸ்- க்கு பேட்டியளித்திருக்கிறார் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித். அப்போது அவர், 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்ததுபோல், இப்போது தலிபான்கள் கெடுபிடியுடன் இருக்க மாட்டார்கள் என உறுதியளித்துள்ளார். அதேநேரத்தில், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்தவர், பெண்கள் பயணம் மேற்கொள்ளும் போது ஆண் துணை கட்டாயம் என்றும், கண்கள் மட்டும் தெரியும் படி உடை அணியும் பெண்கள் பள்ளிக்கும், பணிக்கும் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார். 

 

கடந்த ஆட்சியைப் போல் தலிபான்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதில்லை; அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

 

ஆனாலும், ஆப்கானிஸ்தான் மக்கள் காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,400 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். என்னதான் கெடுபிடி இருக்காது என தலிபான்கள் உறுதியளித்தாலும், ஆப்கான் மக்களிடையே அச்சம் விலகியதாக தெரியவில்லை. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

IND vs AFG : தொடரை வென்ற இந்திய அணி

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Indian team won the series

இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 வது டி20 போட்டி இன்று (14.01.2024) இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ‘டக்’ அவுட் ஆகி இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா  ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் இந்திய அணி 15.4 ஓவர்களில்  4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம்  6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டெல்லியில் லேசான நில அதிர்வு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
 Mild earthquake in Delhi

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் இன்று மதியம் 02.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோன்று பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

முன்னதாக ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 62 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டன. அதே சமயம் கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.