Skip to main content

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அன்று முதல் இன்று வரை...!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

afganisthan government army and peoples kabul

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான சண்டைத் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசம் சென்று விடும் நிலை உருவாகியுள்ளது. 

 

1990- களின் முற்பகுதியில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதனை அகற்ற உருவாக்கப்பட்டக் குழுவினரே தலிபான்கள். சோவியத் யூனியன் உடனான அதிகார போட்டியில் ஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்காதான் தலிபான்களை வளர்த்ததாக சொல்லப்படுவதும் உண்டு. 1996- ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலிபான்கள், கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தி ஆட்சி செய்து வந்தனர். எனினும், அவர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. 

 

இதற்கிடையில், கடந்த 2001- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11- ஆம் தேதி ஒசாமா பின்லேடனின் அல்கய்தா அமைப்பு அமெரிக்காவில் பயங்கர தாக்குதலை நடத்தியது. அப்போது, ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் அடைக்கலம் புகுந்தார். ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க தலிபான்கள் மறுத்ததைத் தொடர்ந்து, கடந்த 2001- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மண்ணில் இறங்கி தலிபான்களுக்கு எதிராக தாக்குதலை நடத்தியது. 

 

கடந்த 2004- ஆம் ஆண்டு தலிபான்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசு அமைந்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த 2014- ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி விடும். 

 

இதனை பயன்படுத்திக் கொண்டு தலிபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தையை மீறித் தாக்குதலை நடத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் சுமார் 65% நிலப்பரப்பு தலிபான் பயங்கரவாதிகள் வசம் சென்றுவிட்டது. 11 முக்கிய நகரங்கள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்று இருப்பதால், அங்கிருந்து தப்பித்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூலை நோக்கி நகர்ந்து வருகின்றன. 

 

இதேநிலை தொடருமானால், ஒரு மாதத்தில் காபூலை தவிர பிற பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி விடுவார்கள் என்றும், மூன்று மாதங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்றும் அமெரிக்க உளவு அமைப்பு கணித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கள் மக்களை ஆபகானிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றன. கிட்டத்தட்ட உலக நாடுகளால் தனித்து விடப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அரசு செய்வதறியாமல் திகைத்து வருகிறது.    

 

ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசம் செல்வது பயங்கரவாதத்தை மேலும் வளர்த்தெடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த ஆபத்தைத் தெரிந்திருந்தும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைதிக் காப்பது தான் வியப்பாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் வளர்வது உலகிற்கு ஆபத்து. குறிப்பாக, அண்டை நாடாக இருக்கும் இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும். 

 

தற்போதைய நிலையில், சண்டையை முடிவுக்கு கொண்டு வர அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள தலிபானுக்கு ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.