Skip to main content

மதங்களை அவமதிக்கும் வகையில் நடந்தால் ரூ.7 கோடி அபராதம், 5 ஆண்டுகள் சிறை... அதிரடி உத்தரவு பிறப்பித்த அபுதாபி நீதித்துறை...

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

எந்த மதங்களை அவமதித்தல் ரூ.7 கோடி அபராதம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

 

abudhabi new rule on religion intolerance

 

 

மதம், நபி தூதர், தெய்வீக புத்தகம் அல்லது வழிபாட்டு தலம் போன்றவற்றை அவமதிக்கும் எந்தவொரு செயலும் மதத்தை அவமதிப்பதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்களை அவர்களது சாதி, மதம் மற்றும் நிற அடிப்படையில் வேறுபடுத்தப்படுவதை அபுதாபி அரசாங்கம் எதிர்ப்பதாக தெரிவித்துள்ள அபுதாபி நீதித்துறை உறுப்பினர் அமீனா அல் மஸ்ரூய் தெரிவித்துள்ளார். எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டால் ரூ.7 கோடி அபராதம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அபுதாபியில் முதல் இந்து கோவில்; பிரதமர் மோடி திறந்து வைத்து வழிபாடு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
First Hindu temple in Abu Dhabi and Worship by Prime Minister Modi

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக நேற்று (13-02-24) ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி) சென்றார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அவர் அபுதாபிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.  

அதன் பின்பு, இன்று (14-02-24) மதியம் அங்கு நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். இதனையடுத்து, இன்று  மாலை பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். இதன் பிறகு, மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதற்கு முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 

அபுதாபி சுவாமி நாராயண் கோவில் வட இந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, அபுதாபிக்கு சென்றிருந்தபோது அதிபர் முகமது பின் சயீத், அபுதாபியில் இந்து கோவிலைக் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தார். இத்துடன், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு தானமாகக் கொடுத்தது. இதையடுத்து, மொத்தம் 27 ஏக்கர் நில பரப்பளவில் சுவாமி நாராயண் கோவில் என்ற இந்து கோவிலைக் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்தவருக்கு அடித்த ஜாக்பாட்... ஒரே நாளில் 28 கோடி ரூபாய்க்கு அதிபதியானார்...

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

துபாய் சென்று வேலை கிடைக்காத விரக்தியில் இந்தியா திரும்பிய ஒருவருக்கு, அந்நாட்டில் வாங்கிய லாட்டரி சீட்டு மூலம் 28 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

 

telangana man won 28 crore rupees in lottery

 

 

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த விலாஸ் ரிக்கலா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தற்போது ஐதராபாத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஓட்டுநர் பணி தேடுவதற்காக துபாய் சென்ற இவர், அங்கு வேலை ஏதும் கிடைக்காததால் விரக்தியில் மீண்டும் ஊருக்கு திரும்பும் முடிவில் இருந்துள்ளார்.

அப்போது திடீரென லாட்டரி சீட்டு ஒன்றை வாங்க நினைத்துள்ளார் அவர். ஆனால் அதனை வாங்குவதற்கான பணம் அவரிடம் இல்லாததால், அவரது மனைவிக்கு போன் செய்து பணம் கேட்டுள்ளார். பின்னர் மனைவி அனுப்பி வைத்த பணத்தை கொண்டு அவரது நண்பர் மூலம் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதன்பின்னர், வேலை கிடைக்காததால் இந்தியா திரும்பிய அவர், ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் லாட்டரியில் 15 மில்லியன் திர்ஹாம் விழுந்திருப்பதாக நேற்று மாலை அவருக்கு தகவல் வந்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 28 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும். இந்நிலையில், "என்னிடம் பணமில்லாததால், மனைவி பத்மாவிடம் பணம் கேட்டேன். பின்னர் அவர் பணம் அனுப்பியதும் அதனை அபுதாபியில் வேலை பார்க்கும் என நண்பன் ரவியிடம் கொடுத்து, லாட்டரி சீட்டு வாங்கச் சொன்னேன். அதற்கு பரிசு விழுந்திருக்கிறது. இதற்கு முழு காரணமும் என் மனைவி பத்மாதான்" என கூறி மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறார் ரிக்கலா.