Skip to main content

"97 குழந்தைகளின் உயிரைப் பறித்த ரஷ்யா" - கனடா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் பேச்சு

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

97 ukrainian children passed away in russia's action

 

20 நாட்களைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள் முடிவுறாத நிலையில், இந்த போரை உலக நாடுகள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். இப்போரின் காரணமாக மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வருகின்றன. 

 

இந்நிலையில், போர் நிலைமை குறித்து கனடாவின் நாடாளுமன்றத்தில் வீடியோ வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை உக்ரைனில் 97 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், " ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து 97 உக்ரேனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனில் உள்ள நினைவு வளாகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் அனைத்தையும் ரஷ்யா அழித்துவிட்டது. நாங்கள் பெரிதாக எதையும் கேட்கவில்லை. எங்களுக்கான நியாயத்தைக் கேட்கிறோம். உலக நாடுகளின் உண்மையான ஆதரவை நாங்கள் கேட்கிறோம். எங்களைத் தற்காத்துக் கொள்ளவும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், இப்போரில் வெற்றிபெறவும் உலக நாடுகளின் ஆதரவைக் கேட்கிறோம். இதுவரை உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு நன்றி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது போரை முடிவுக்குக் கொண்டு வராது. ரஷ்யாவைத் தடுக்க, உக்ரைனைப் பாதுகாக்க நாம் அனைவரும் இதனை விட இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்." எனத் தெரிவித்தார். 

 

ஐரோப்பிய யூனியனிலும் நேட்டோ படையிலும் உக்ரைன் இணைந்துவிடலாம் என்ற அச்சமே ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்ட சூழலில், இவ்விரண்டிலுமே உக்ரைன் தோல்வியடைந்துள்ளதால் இதனை முன்வைத்து உலக நாடுகள் ரஷ்யாவைப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவைக்க வேண்டும் எனக் கருத்துக்கள் எழுந்து வருகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.