Skip to main content

குடும்ப தகராறு காரணமாக 9 பேர் சுட்டுக்கொலை; பாகிஸ்தானில் பயங்கரம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

9 people shot passed away due to family dispute in Pakistan

 

பாகிஸ்தானில் உள்ள வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துங்குவா அருகில் மலகாண்ட் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாகிஸ்தானில் உள்ள வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துங்குவா அருகில் மலகாண்ட் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு குழந்தைகளோடு தனது தந்தை வீட்டிற்கு இளம்பெண் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த வாலிபர் தனது மனைவியை அடிக்கடி சமாதானம் செய்துள்ளார். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

 

இதனையடுத்து, அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் நேற்று இரவு நுழைந்திருக்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் தனது குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கண்ட வாலிபர், தான் கொண்டு வந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். மேலும், மனைவியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தைகளையும் சுட்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் உள்ள அறையில் இருந்தவர்கள் சம்பவம் நடந்த அறைக்கு வந்து தாக்குதல் நடத்திய வாலிபரையும் அவரது நண்பர்களையும் தடுக்க முயன்றுள்ளார்கள். ஆனால், அவர்கள் மீதும் தனது நண்பர்கள் துணையோடு துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.

 

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து மனைவி, குழந்தைகள் உள்பட 9 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காகவும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடிய வாலிபரையும் அவரது நண்பர்களையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.