Skip to main content

ஏமனின் பட்டினியை உலகுக்கு சொன்ன சிறுமி மரணம்...

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
yemen

ஏமனில் மனிதாபிமானம் அழிந்துவிட்டது என்பதை அடையாளப்படுத்த அமல் ஹுசைன் என்கிற 7 வயது சிறுமியின் புகைப்படம் கடந்த வாரம்  நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. தற்போது அந்த சிறுமி மரணம் அடைந்துள்ளார்.  சத்துணவு குறைப்பாட்டினால்தான் அவர் மரணமடைந்ததாக அச்சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 
 

நியுயார்க் டைம்ஸில் வெளியான அந்த புகைப்படத்தை புளிட்சார் விருதை வென்ற புகைப்பட பத்திரிகையாளர் டைலர் ஹிக்ஸால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தில், நெஞ்சு கூடு வெளியே தெரிந்து, தோல் மெளிதாக உள்ள நிலையில் ஏழு வயது சிறுமி படுக்கையில் படுத்திருப்பது போன்று இருக்கும். கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 
 

இந்த புகைப்படத்தை பார்த்த உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்தது.  மேலும் இந்த புகைப்படம் ஏமனில் நடந்த உள்நாட்டு போரினால் பல குழந்தைகள் சத்துணவு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளியே தெரிய வைத்தது. 
 

இச்சிறுமியின் மரணம் குறித்து அவரது அம்மா மரியம் அலி கூறுகையில், என்னுடைய இதயம் சுக்கு சுக்காக நொறுங்கிவிட்டது. 
 

அமல் எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பாள். தற்போது என்னுடைய மற்ற குழந்தைகளை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது.
 

கடந்த 2015 ஆம் ஆண்டில் அமெரிக்க சவுதி கூட்டணி மற்றும் இரானிய ஹௌதிஸ் இயக்கத்தாலும் 10,000 உயிர்கள் பிரிந்துள்ளன மற்றும் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  
 

ஐநாவை சேர்ந்த உலக உணவு குழு, இந்த கூட்டணிகளின் சண்டையின்போது வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்துவதை போன்று, நிவாரண பொருட்களையும் பாதிக்கப்படும் மக்களுக்கு கொடுக்க உள்ள உணவுகளையும் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இதுபோன்ற தாக்குதலால் ஒரு கோடியே இருபது லட்ச மக்களுக்கு உணவின்றி பட்டினியால் சாகின்றனர்.  இது போர் நடக்கும் அனைத்து நாடுகளில் இதுபோன்று நடக்கின்றது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி தாக்குதல்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
US,UK incident on Yemen

மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்தி கப்பல்களைத் தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இரு நாடுகளும் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான்  ஆதரவு  பெற்ற ஹவுதி இயக்கம் ஏமனிலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஏமன் நாட்டின் தலைநகரான சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. விமானம் மற்றும் கடற்படைகள் மூலம் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட 12 மையங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த தாக்குதலுக்கு 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேவைப்பட்டால் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த தாக்குதலால் காசாவில் நடக்கும் போர் தீவிரமடையும் எனவும் அஞ்சப்படுகிறது. 

Next Story

ஏமனில் வெடிகுண்டு தாக்குதல்!

Published on 27/02/2022 | Edited on 27/02/2022

 

Bomb attack in Yemen!

 

ரஷ்யா, உக்ரைன் மீது நான்காவது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மக்கள் உயிர் பிழைப்பதற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

உலகமே உக்ரைன்-ரஷ்யா மோதலை உற்றுநோக்கி வரும் நிலையில், ஏமன் நாட்டில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஏமன் உள்நாட்டு போரில், அந்நாட்டின் ராணுவ கிளர்ச்சிக்கு எதிராக சவூதி போரில் ஈடுபட்டு வரும் நிலையில், போர் விமானங்கள் மூலம் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.