Skip to main content

2 வாரங்களில் 400 பேருக்கு எய்ட்ஸ் தொற்று: மருத்துவர்கள் அஜாக்கிரதையால் நடந்த கொடுமை...

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

2 வார காலங்களில் பெருவாரியான குழந்தைகள் உட்பட 400 பேருக்கு எய்ட்ஸ் தோற்று ஏற்பட்ட சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாண பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

400 people affected by aids in two weeks at pakistan

 

 

சிந்து மாகாணத்தின் லர்கானாவின் புறநகர்ப் பகுதியான வஸாயோ கிராமத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து உடல்நல கோளாறுகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் இறுதியில் எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் எய்ட்ஸ் ஆரம்ப நிலை அறிகுறிகளுடன் வரும் மக்கள், குழந்தைகள் அனைவருக்கும் எய்ட்ஸ் கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகளின் முடிவில் தான் அதிர்ச்சிகரமான முடிவு அவர்களுக்கு கிடைத்துள்ளது.

சோதனை முடிவுகளின்படி கடந்த இரு வாரங்களில் மட்டும் 400 பேர் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு சோதனைக்கு வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. தவறான, சுத்தமில்லாத ஊசி போன்ற உபகரணங்களை அந்த பகுதியில் இருந்த சில மருத்துவர்கள் பயன்படுத்தியதன் விளைவாக அதிலிருந்து மக்கள் அனைவருக்கும் தவறுதலாக எய்ட்ஸ் பரப்பப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான பயிற்சியில்லாத அரைகுறை மருத்துவர்கள் சிலரால் இவ்வாறு பலரின் வாழ்க்கை வீணாகியுள்ளதாக இதனை கண்டறிந்த மருத்துவ குழு தெரிவித்துள்ளது. எய்ட்ஸ் தொற்று ஏற்பட்ட 400 பேரில் நிறைய குழந்தைகள் உள்ளனர் என்றும், இந்த தகவல் தற்போதுதான் மக்களுக்கு தெரிந்து வருவதால் சோதனைக்கு நிறைய பேர் வரும்போது தான் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள் என தெரியும் என்றும் மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் யார் மூலமாக இந்த எய்ட்ஸ் பரவியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஒருவர் பேட்டியளித்த போது, " என் 5 வயசு குழந்தைக்கு இப்படி ஒரு நோய் வருவதற்கு காரணமா இருந்த யாரும் நல்லாவே இருக்க மாட்டாங்க. எனக்கு இன்னும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. அவங்களுக்கும் இந்த நோய் வந்துட்டா நான் என்ன பண்றது. சீக்கிரமா யாரவது இந்த நோய்க்கு மருந்து அனுப்பி வையுங்க. இல்லனா எங்க ஊர்ல ஒரு குழந்தைங்க கூட பிழைக்காது" என கதறியுள்ளார். பாகிஸ்தானில் நடந்துள்ள இந்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.