Skip to main content

3ஜி இன்டர்நெட் சேவை தொடக்கம்; 600 எம்.பி டேட்டா 490 ரூபாய்...

Published on 06/12/2018 | Edited on 06/12/2018

 

cub

 

அரசு ஊடகவியலாளர்களுக்கும், வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கும் மட்டுமே இவ்வளவு நாள் 3ஜி இன்டர்நெட் சேவையை வழங்கி வந்தது கியூபா அரசு. தற்பொழுது பொதுமக்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் செல்போனில் செலவிடும் நேரம் மற்றும் இணைய பயன்பாட்டை குறைக்கவே இவ்வளவு நாட்கள் 3ஜி சேவையை வழங்காமல் தவிர்த்து வந்தது கியூபா அரசு. தற்பொழுது இந்த முடிவை மாற்றி மக்களுக்கும் இந்த சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி 600 எம்.பி கொண்ட டேட்டா பேக்கின் விலை இந்திய மதிப்பில் 490 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

 5G in 8 cities including Chennai

 

அதிவேக இணைய வசதியை வழங்கவுள்ள 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி அக்.1 ஆம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட எட்டு மாநகரங்களில் 5ஜி தொழிற்ப சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் தீபாவளியையொட்டி 5ஜி சேவையை பெறலாம் என  அந்நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் ஆகிய நகரங்களில் அந்த சேவையை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. 5ஜி வசதி உள்ள செல்போன்களில் 5ஜி சேவைக்கான குறுஞ்செய்தி மூலம் தகவல் வாடிக்கையாளர்களுக்கு தகவல் வரும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல்! 

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

Airtel launched 5G service in 8 cities including Chennai!

 

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே 5ஜி சேவையைத் தரும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஏர்டெல் பெற்றுள்ளது. 

 

நாட்டின் பிற பெரு நகரங்களில் அடுத்தாண்டு மார்ச் முதல் 5ஜி வழங்கப்படும் என்றும், 2024- ஆம் ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். தற்போது 4ஜி சேவைக்கு வழங்கப்படும் கட்டணமே, 5ஜி சேவைக்கு வசூலிக்கப்படும் என்றும், பின்னர் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வரும் அக்டோபர் 22- ஆம் தேதி முதல் அக்டோபர் 26- ஆம் தேதிக்குள் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை வழங்கவுள்ளது. வோடஃபோன்- ஐடியா நிறுவனம், 5ஜி சேவை எப்போது முதல் வழங்கப்படும் என்று இன்னும் அறிவிக்கவில்லை. 

 

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை 200 நகரங்களில் இன்னும் ஆறு மாதங்களில் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.