அரசு ஊடகவியலாளர்களுக்கும், வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கும் மட்டுமே இவ்வளவு நாள் 3ஜி இன்டர்நெட் சேவையை வழங்கி வந்தது கியூபா அரசு. தற்பொழுது பொதுமக்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் செல்போனில் செலவிடும் நேரம் மற்றும் இணைய பயன்பாட்டை குறைக்கவே இவ்வளவு நாட்கள் 3ஜி சேவையை வழங்காமல் தவிர்த்து வந்தது கியூபா அரசு. தற்பொழுது இந்த முடிவை மாற்றி மக்களுக்கும் இந்த சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி 600 எம்.பி கொண்ட டேட்டா பேக்கின் விலை இந்திய மதிப்பில் 490 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.