Advertisment

ஒருபுறம் கரோனா தொற்று... மறுபுறம் கள்ளச்சாராயம் - திணறும் மெக்ஸிகோ!

d

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 46 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 85,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைதங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள்,தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

Advertisment

இதனால் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் பொதுபோக்குவரத்து, கல்விக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கின் ஒருகட்டமாக பல நாடுகளில் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கள்ள சந்தையில் மதுகுடித்து அதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மெக்ஸிகோவில் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை வாங்கி குடித்த 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 4000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe