சீனாவின்வூஹான்நகரிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கியகரோனாவைரஸ்உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர்கரோனாபரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 3800 க்கும் மேற்பட்டோர் இதனால்உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரானில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மது குடித்தால்கரோனாவைரஸ்தாக்காது என்று பரவிய வதந்தியால் ஈரானில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஈரானில்7000க்கும்மேற்பட்டோர்கரோனாவால்பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதுவரை 237 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மது குடித்தால்கரோனாவராதுஎனப்பரவிய வதந்தியால்200க்கும்மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.மெத்தனால்கலப்பில் ஏற்பட்டதவறுகாரணமாகக்கள்ளச்சாராயம்விஷமாகியதாகக்கண்டறியப்பட்டுள்ளது. இந்த விஷசாராயத்தைக்குடித்த 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 218 பேர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.