Skip to main content

15,000 வாக்காளர்கள், ஆனால் 2,52,000 வாக்குகள்..! ஜனநாயகம் கேலிக்கூத்தான முதல் தேர்தல்...

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதில் வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுபோன்ற புகார்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்சிகள் மீது வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உலகில் நடந்த தேர்தல்களிலேயே மிகவும் மோசமானது என வர்ணிக்கப்படுவது 1927 ஆம் ஆண்டு லைபீரியா நாட்டில் நடந்த பொது தேர்தல் தான்.

 

1927 liberia general election named as most fraudulent election in world

 

 

நவீன வாக்கு இயந்திரங்கள் இல்லாமல் வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்ட அந்த காலத்தில் நடத்தப்பட்ட ஒரு தேர்தல் தான் இன்று வரை உலகின் மிக மோசமான தேர்தலாக உலக மக்களால் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட உலகின்  மோசமான தேர்தலை நடத்தியவர் சார்லஸ் கிங் என்ற லைபீரியா நாட்டு அரசியல்வாதியாவார்.

ஆப்பிரிக்காவின் ‘ட்ரூ விக் பார்ட்டி’ என்ற கட்சியை சேர்ந்த இவர், 1920ன் ஆம் ஆண்டு லைபீரியா நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் நடந்த அடுத்த தேர்தலிலும் இவரே வெற்றிபெற்றார். இந்நிலையில் தனது மூன்றாவது அதிபர் தேர்தலை சந்தித்தபோது தோல்வி பயம் அவரை தொற்றிக்கொண்டது. எனவே தேர்தல் நாளில் நாடு முழுவதும் உள்ள தனது ஆட்களை வைத்து அனைத்து இடங்களிலும் கள்ள வாக்குகளை பதிவிட செய்தார். வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் எதிர்கட்சியினருக்கு மட்டுமின்றி அந்த நாட்டு மக்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

வெறும் 15,000 வாக்காளர்களை மட்டுமே கொண்ட அந்த நாட்டில் 2,52,000 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 9000 வாக்குகள் எதிர்கட்சிக்கும், மீதமுள்ள 2,43,000 வாக்குகள் சார்லஸ் கிங்குக்கும் பதிவாகியிருந்த. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் மீண்டும் அவரே அதிபராக பொறுப்பேற்று அடுத்த 3 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இப்படி 1927 ஆம் ஆண்டு லைபீரியாவில் நடந்த இந்த தேர்தலே இன்று வரை உலக அளவில் மிக மோசமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகிலேயே மோசமான தேர்தல் என்று கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இவரின் கட்சி லைபீரியா நாட்டை 100 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அதில் இவர் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி நடவடிக்கை; சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர் அரசு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Madagascar government passed the law Action to remove the male factor who misbehave

உலகெங்கிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகப் பல்வேறு நாடுகள் அதிரடி சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன. அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் என்ற நாடு, பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மிகக் கடுமையான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, இந்த நாட்டில் வாழும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 133 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில், குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் அந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

Next Story

பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் உயிரிழப்பு

Published on 06/11/2022 | Edited on 06/11/2022

 

nn

 

40 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானமானது ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தான்சானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில்  40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் சிறிய பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.  வானில் சுமார் 328 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானத்தின் எஞ்சின் பழுதடைந்து எதிர்பாராத விதமாக ஏரிக்குள் பாய்ந்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.