Skip to main content

ஜி எஸ்.டியால் 18% வரி வருவாய் அதிகரிப்பு

Published on 02/07/2018 | Edited on 02/07/2018
gst

ஜி எஸ் டி வரி விதிப்பிற்கு பிறகு கோவை மண்டலத்தில் 18% வரி வருவாய் அதிகரித்து

உள்ளதாக கோவையின் ஜி எஸ் டி ஆணையாளரான ஶ்ரீனிவாச ராவ் தெரிவித்து உள்ளார் .

ஜி எஸ் டி வரி விதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு கோவையில் ஜி எஸ் டி வார விழா கொண்டாட்டம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் கோவையின் ஜி எஸ் டி மற்றும் மத்திய கலால் துறையினர் ஆணையாளர் ஶ்ரீனிவாச ராவ் கலந்து கொண்டார் . மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில்துறையினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவையின் ஜி எஸ் டி ஆணையாளர் ஶ்ரீனிவாசன் ராவ் , கோவை மண்டலத்தில்  ஜி எஸ் டி வரி விதிக்கப்பட்ட பிறகு 18% வரி வருவாய் அதிகரித்து உள்ளதாகவும் , மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த வரி வசூலில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் . மேலும் வரி செலுத்தாதவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் , ஜி எஸ் டி வரி செலுத்துவது தொடர்பாக தொழில் துறையினருக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் கூறினார் . மேலும் சிறு குறு தொழில் துறையினருக்கு ஜி எஸ் டி குறித்த சட்டங்களை பின்பற்றுவதில் சிக்கல்கள் இருந்துவருவதாகவும், இருப்பினும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறினார் . ஜி எஸ் டி வரி விதிப்பிற்கு பிறகு கோவை மண்டலத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்துவதில் இணைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார் . 


 

சார்ந்த செய்திகள்