சிரியாவில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சிரியாவின் இட்லீப் மாகாணத்தில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர், 18 பேர் பலியாகியுள்ளனர். அல்கொய்தா அமைப்பின் மறைமுக கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 முதல் சிரியாவில் நடக்கும் இந்த உள்நாட்டு போரில் இது வரை சுமார் 4 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.