Skip to main content

7 பள்ளி குழந்தைகள் உட்பட 13 பேரை பலி வாங்கிய சவுதியின் வான்வழி தாக்குதல்... 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்...

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

ஏமனில் சனா பகுதியில் உள்ள பள்ளி அருகே சவுதி - ஏமன் கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். இதில் 7 பேர் குழந்தைகள். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

yeman

 

இது குறித்து அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஹவுத்தி கிளர்ச்சியாளர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் 7 பேர் குழந்தைகள் என்றும், மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப்படைக்கும் கடந்த 2015 முதல் உள்நாட்டு போர் நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் இந்த தாக்குதலை ஐநா சபை முன்னரே கண்டிருந்ததும்  குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரபிக் கடலில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்; நடுக்கடலில் பரபரப்பு

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
incident on a commercial ship in the Arabian Sea!

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.  

சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு எம்.வி.செம் என்ற வணிகக் கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது. அந்த கப்பல் குஜராத் மாநிலம், போர்பந்தர் பகுதியிலிருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், கப்பல் தீப்பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து கடலோர படையினர் உதவிக்கு விரைந்தனர்.

அங்கு விரைந்த கடலோர படையினர், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதன் பின்னர், கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உட்படக் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தீ பற்றியதால் கப்பலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பலும் அங்கு விரைந்துள்ளது.

இது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது, “சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை அதிகாரிகள், அங்கு விரைந்து உதவ புறப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். 

Next Story

இஸ்ரேலுக்கு நெருக்கடி; போரில் களமிறங்கிய ஏமன்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Yemen entered the conflict against Israel

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இதையடுத்து காசா மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் அதனைத் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், காசாவில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணையச் சேவை இல்லாததால் தற்போது என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உலகத்திலிருந்து காசா தனிமைப்படுத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

 

காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இனி வரும் காலங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் எனக் கூறப்படுகிறது. நேற்று பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஜபாலியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜபாலியாவிற்கு தஞ்சமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோடர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி அமைப்பு தற்போது போரில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே ஈரானில் இருந்து செயல்படும் பலம் வாய்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் சண்டையிட்டு வரும் நிலையில், தற்போது ஹவுதி அமைப்பு அந்த போரில் குதித்துள்ளது இஸ்ரேலை மேலும் கவலையடையச் செய்துள்ளது. பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது. செங்கடலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியுள்ளது. இஸ்ரேல் தற்போது ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி என மும்முனை தாக்குதலை எதிர்கொண்டு வருவதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.