ADVERTISEMENT

குகையில் சிக்கிய 13 பேரும் பத்திரமாக மீட்பு!! மகிழ்ச்சியில் தாய்லாந்து!!

05:34 PM Jul 10, 2018 | vasanthbalakrishnan

தாய்லாந்து குகையில் சிக்கிக்கொண்ட 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

ADVERTISEMENT

தாய்லாந்தின் வட கிழக்கு பகுதியான தாம் லூவாங் என்ற மலை பகுதிக்கு கடந்த 23-ஆம் தேதி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் கால்பந்தாட்ட வீர்கள் (சிறுவர்கள்) உட்பட 13 பேர் மலையேற்ற பயிற்சியின் போது ஒரு குகையில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அங்கு பெய்த கனமழையால் அவர்கள் குகையின் உள்ளே சிக்கிக்கொண்டு இறுதியில் காணாமல்போயினர்.

ADVERTISEMENT

இவர்களை மீட்க தாய்லாந்து ராணுவம் மற்றும் மீப்பு படை உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் குகையில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணியில் ஈட்பட்டிருந்தனர். ஆனால் குகையில் மயமான நபர்களை கண்டு பிடிக்கமுடியாத நிலையில் ஒன்பது நாட்களை கடந்து அவர்கள் இருக்கும் இடத்தை மிக சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கான அடிப்படை பொருட்களை கொண்டு சென்ற 38 வயதான சமன் குணன் என்ற மீட்பு வீரர் உள்ளே சிக்கி தவிப்பவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று திரும்பும் வழியில் மூச்சுத்திணறி இறந்தார்.

இப்படி பல்வேறு கட்டங்களுக்கு பிறகு மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அங்கு மோசமான வானிலை நிலவுவதால் மீண்டும் மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 4 நான்கு சிறுவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர். நேற்று நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டு மொத்தம் 8 பேர் மீட்கப்பட்ட செய்தி தாய்லாந்து மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை தந்தது.

இந்நிலையில் தற்போது 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட குகையில் இவ்வளவு நாட்கள் சிக்கித்தவித்த 13 பேரும் மீட்புக்குழுவால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அந்நாட்டு மக்களுக்கும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT