Skip to main content

104 வயதில் கைதான பாட்டி...வினோத காரணம்...

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் பகுதியில் 104 வயது பாட்டி ஒருவர் வினோத காரணத்தால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

104 year old arrested in england for weird reason

 

பிரிஸ்டல் பகுதியில் ஒரு தனியார் காப்பகத்தில் ஏராளமான முதியவர்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் அங்கு வசிக்கும் முதியவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பது என்று அந்த காப்பக நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி ஒவ்வொருவரும் தங்கள் ஆசைகளை ஒரு காகிதத்தில் எழுதி ஒரு பெட்டியில் போட்டுள்ளனர்.

அதில் 104 வயதான அன்னி புரோக்கன் ஒரு முறையாவது கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல வேண்டும் என எழுதியிருந்தார். இதனை பார்த்த காப்பக நிர்வாகிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள உள்ளூர் காவல் துறையினரிடம் காப்பக நிர்வாகிகள் பேசியுள்ளனர்.

இதற்கு ஒப்புக்கொண்ட அவர்கள் காப்பகத்திற்கு நேரடியாக வந்து அந்த பாட்டியை கைது செய்தனர். கைது செய்து தங்களின் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர். காப்பகத்திற்கு பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், "வாழ்நாள் முழுவதும் சட்டத்தை மதித்துப் நான் நடந்தேன், இதுவரை எதற்கும் காவல்துறையிடம் சிக்கியதில்லை. இதனால் என்னுடைய ஆசை ஒரே ஒரு முறையாவது கைதாக வேண்டும் என்பதுதான். நான் கைது செய்யப்பட்ட இந்த நாள் மிகவும் இனிமையானது. மிகவும் சுவாரஸ்யமாக கழிந்தது. இந்த அனுபவம் இதுவரை எனக்குக் கிடைத்ததே இல்லை. அவர்கள் என் கைகளில் விலங்கு போட்டுக் கைது செய்தனர். அப்போது நான் நிறைவாக உணர்ந்தேன்" என கூறினார். 104 வயதான பாட்டி கைது செய்யப்பட்ட இந்த சுவாரசிய சம்பவம் உலகம் முழுவதும் வித்தியாசமாகவும், உணர்வுபூர்வமாகவும் பார்க்கப்படுகிறது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.