'கைதான பாலியல் கொடூரன் யார்?'- வெளியான அதிர்ச்சி தகவல்கள்

a4548

Who is the arrested predator? - Shocking information revealed Photograph: (police)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சாலையில் நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த ஒருவர் சிறுமியைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போது இளைஞர் ஒருவர் சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்றது தொடர்பான காட்சி வெளியாகியது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.13 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளியை தனிப்படை போலீசார் பிடிக்க முடியாமல் திணறினர்.

இன்றோடு 14 நாட்களாக தனிப்படை போலீசார் சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை தேடி வந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை வருகின்ற ரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இதே நபர் போன்ற உருவ ஒற்றுமை மற்றும் உடை ஒற்றுமை உடைய நபரை பிடித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட ஒரே உருவ ஒற்றுமை இருப்பதால் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகிது.

சிறுமி தரப்பும் உறுதி செய்த நிலையில் அந்த நபர்தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நபர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேற்குவங்கத்தை சேர்ந்த அந்த நபர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபாவில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. கஞ்சா போதைக்கு அடிமையான அந்த நபரை தாபா நிர்வாகம் பலமுறை பணியில் இருந்து நீக்கியதும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஊர் சுற்றுவதை இந்த நபர் வாடிக்கையாக கொண்டிருந்ததும், வழக்கம் போல 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஊர் சுற்றச் சென்ற அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்படும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. 

girl child Gummidipoondi police women safety
இதையும் படியுங்கள்
Subscribe