Advertisment

“விஜய் அரசியலுக்கு வந்தது அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” - டி.டி.வி. தினகரன்

Untitled-1

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தீவிரமாகத் தயாராகி வருகின்றன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் (விசிக), மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) ஆகிய கட்சிகள் மீண்டும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம், எதிர்க்கட்சியான அதிமுக, பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அமமுக, தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமித் ஷாவின் நிலைப்பாடு திருப்தி அளிக்கவில்லை. துரோகத்தின் மொத்த உருவமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் தொண்டர்களின் எண்ணத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்கிறார். துரோகம் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் இல்லை. அவர் எங்கு சென்றாலும் தன்னை முதல்வராக மாற்றிக் கொள்கிறார். அவரது அகங்கார ஆணவப் பேச்சு முறியடிக்கப்பட வேண்டும்.

நல்ல முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக டிசம்பர் 6ஆம் தேதி அமுமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவு எடுக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். இது குறித்து டிசம்பர் 6ஆம் தேதிஎங்களின் நிலைப்பாட்டை கூறுகிறோம்” என்றார். மேலும், விஜய் அரசியலுக்கு வந்தது என்பது விஜயகாந்த் வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது போல் ஏற்படுத்துவார். இது அனைத்து கட்சிகளுக்கும் சிறு பாதிப்பு ஏற்படும் என்று பேசினார்.

b.j.p ammk admk TTV Dhinakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe