ஒரு நபர் தன்னிடம் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்தாகக் கூறி ஸ்கூட்டரில் துரத்திச் சென்று நடுத்தெருவிலேயே ஒரு பெண் பளார் பளார் என்று பலமுறை அறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம், ஃபதேபூரில் உள்ள ஜெயந்தி சந்தைக்கு அருகே, மதுபோதையில் இருந்த ஒரு நபர், அங்கிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியான ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அந்த பெண், ஒரு கட்டத்தில் கோபமடைந்து தனது ஸ்கூட்டரில் அவரைத் துரத்தினார். பின்னர், சந்தையின் நடுவில் அந்த நபரைப் பிடித்து, அவரது பைக்கை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவரை பல முறை அடித்து தாக்கினார். பின்னர், அவர்களைச் சுற்றியுள்ள மக்கள் தலையிட்டு, அந்த பெண்ணை அமைதிப்படுத்தி, அந்த நபரை அங்கிருந்து புறப்படச் சொன்னார்கள்.
இது தொடர்பான வீடியோவில், அந்த பெண் அந்த நபரின் கன்னத்தில் மீண்டும் மீண்டும் அறைகிறார். அவர்களைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது. இதனை தொடர்ந்து அந்த பெண், அந்த நபரைக் கண்டித்து, அவரது தாய் மற்றும் சகோதரி போன்ற பெண்களை மதிக்குமாறு அறிவுறுத்துவதை காட்டுகிறது.
இந்த வீடியோவில், அந்தப் பெண் அந்த நபரை மீண்டும் மீண்டும் அறைந்து, தன்னை நோக்கிச் சொன்னதாகக் கூறப்படும் அவமானகரமான கருத்துக்களைச் சொல்லத் துணிந்ததைக் காட்டுகிறது. அவர்களைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியிருப்பதைக் காண முடிந்தது. அவர் அந்த நபரைக் கண்டித்து, அவரது தாய் மற்றும் சகோதரி போன்ற மற்ற பெண்களை மதிக்குமாறு அறிவுறுத்தினார். நடுத்தெருவிலேயே, ஒரு பெண் ஒரு நபரை பலமுறை அடித்து தாக்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.