தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி நள்ளிரவு ஒரு மணி வரை கரூர், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.