Advertisment

த.வெ.க. மாநாடு; ராம்ப் வாக் தடுப்புகளில் கிரிஸ் தடவிய பாதுகாவலர்கள்!

tvk-lubricant

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினமே (19.08.2025) மதுரைக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டுத் திடலுக்குத் தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். அதன்படி விடியற்காலையிலேயே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அங்கு வருகை தந்துள்ள தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Advertisment

இந்நிலையில் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் விஜய் ராம்ப் வாக் செல்ல உள்ளார். அதன் இரு பக்கத்திலும், அதே போன்று மேடைக்கு முன்பாக முக்கிய நிர்வாகிகள் அமரக்கூடிய இடத்திலும் சுமார் 10 அடி உயரம் கொண்ட பேரிகார்டுகள் தயார் செய்யப்பட்டன. இதில் தொண்டர்கள் யாரும் ஏறக்கூடாது என்பதற்காகத் தனியார் பாதுகாவலர்கள் மூலம் பேரிகார்டுகள் முழுவதுமாக கிரீஸ் கிரீஸ் தடவப்பட்டது. அதாவது யாரேனும் பேரிகார்டுகள் மீது ஏற முயற்சி செய்தால் கூட அதில் ஏற முடியாமல் தடுப்பதற்காக கிரீஸ் பூசப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

madurai Tamilaga Vettri Kazhagam Conference tvk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe