அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவுள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர், செங்கோட்டையனிடன் கட்சியில் இணைவது குறித்து சந்தித்துப் பேசியதாகவும், அதையடுத்து செங்கோட்டையன் நாளை (27-11-25) தவெகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை இன்று (26-11-25) காலை அதிரடியாக ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து இன்று செங்கோட்டையன் வழங்கினார். இதனிடையே, செங்கோட்டையனை தங்களது கட்சியில் இணைக்க திமுக தீவிர முன்னெடுப்பு எடுத்து வந்தது. இதையடுத்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யை செங்கோட்டையன் நேரில் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், அவர் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்த மூத்த தலைவரான செங்கோட்டையன் தவெகவில் இணைய இருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜிடம், செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், “ஒரு நாள் பொறுத்திருங்கள், நல்ல செய்தி நாளைக்கு வரும். திமுகவுக்கு ரெட் அலர்ட் ஆரம்பம்” என்று கூறிச் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/26/arun-2025-11-26-23-08-53.jpg)