நாடு முழுவதும் மாற்றி அமைக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ரயிலில் சாதாரண வகுப்பில் 215 கி.மீ தூரம் வரை பயணிப்பதற்கு எந்த கட்டணமும் இல்லை என்றும், 215 கி.மீ மேல் ஒவ்வொரு ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா, மெயில், ஏசி இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கி.மீக்கு 2 பைசா என உயர்த்தப்படவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதே போல், அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் 1 கி.மீ பயணத்துக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், 500 கி.மீ வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், புறநகர் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண விலை உயர்த்தப்படாது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ரயில் கட்டண உயர்வு நாடு முழுவதும் இன்று (26-12-25) அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/train-2025-12-26-11-01-25.jpg)