Advertisment

திருப்பரங்குன்றம் தீப வழக்கு; உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!

madurai-high-court

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவானது நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் இன்று (04.12.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் வாதிட்டார். 

Advertisment

அப்போது மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுகையில், “மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார். ஏனென்றால் நேற்று (03.12.2025) மாலை 06:00 மணிக்குத் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை 05.30 மணி வரை எந்தவிதமான ஏற்பாடுகளையும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்குக் கோவில் நிர்வாகம் செய்யவில்லை. எனவே தான் நீதிமன்ற அமைப்பு நடவடிக்கை தாக்கல் செய்தோம். எனவே இதில் எந்தவித விதிமீறலும் இல்லை. 

Advertisment

மேலும் மாலை 6 மணி வரை நீதிபதி அவகாசம் வழங்கினார். இதைத் தொடர்ந்துதான் தனி நீதிபதி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக மாற்று வழியாக மனுதாரரைத் தீபம் ஏற்றுவதற்கு அனுப்பி வைத்தார். அவரோடு சி.எஸ்.ஐ.எப். வீரர்களையும் அனுப்பி வைத்தார். எனவே இது சட்ட முறைப்படிதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என வாதிட்டனர். இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டிருந்த நீதிபதிகள், “சி.எஸ்.ஐ.எப். வீரர்களை அனுப்பியதன் காரணம் என்ன?. அதன் நோக்கம் என்ன?. 

ஒரு மலை உச்சியில் ஒரு தரப்பினர் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கேட்கும் போது பிற மதத்தினர் எவ்வாறு பாதிக்கப்படுவர்?. சமூக நல்லிணக்கம் எவ்வாறு பாதிக்கப்படும்?. அந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு எந்த தண்டனையும் தனி நீதிபதி வழங்கவில்லை. உத்தரவை நிறைவேற்றாததால் மாற்று வழிக்காக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார் இதில் என்ன வேறுபாடு உள்ளது?. ஏன் நீதிமன்ற அமைப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பினார்கள். அதற்குத் தர்கா மற்றும் அரசு தரப்பும் வாதிடுகையில், “மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து 30 நாட்கள் கால அவகாசம் உள்ள நிலையில் அவசர அவசரமாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்?. 

திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. ஒரு காவலர் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதோடு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இது போன்ற நீதிமன்ற உத்தரவுகள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே தான் 144 தடை உத்தரவு பிறப்பித்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. எனவே தான் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். எனவே இந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டனர். இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று மாலைக்குள்  தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளனர். 

madurai high court Thiruparankundram tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe