They will now be 'social justice hostels' - CM announces Photograph: (dmk)
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் அரசியல் தலைவர்களின் பெயர்களில் இயங்கி வரும் விடுதிகள் இனி 'சமூக நீதி விடுதிகள்' என அழைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால தமிழ் சமுதாயத்தை சமத்துவ சமுதாயமாக கட்டமைத்திட இந்த முயற்சி அடித்தளம் அமைக்கும். சமூக நீதி, சமநீதி, சட்ட நீதி ஆகியவை அனைவருக்கும் பொது என்ற நிலையை உருவாக்க திராவிடம் மாடல் அரசு தொடர்ந்து பங்காற்றும்' எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.