Skip to main content

கள்ள நோட்டுக்கும் யூ-டியூப்.... நான்கு பேர் கைது!!

Published on 21/09/2018 | Edited on 21/09/2018


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த பாப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். அப்பகுதியில் பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தவித்து வந்தார்.  கண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் பானு இவர் பாப்பம்பாளையம் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தார், பேக்கரிக்கு வந்து சென்றதால் சுகுமாருக்கும் நாகூர் பானுவிற்கும் நட்பு ஏற்பட்டது. தனது கடன் குறித்து நாகூர் பானுவிடம் சுகுமார் தெரிவித்துள்ளார். அப்போது யூ-டியூப் இணையதளத்தில் கள்ளநோட்டு எப்படி தயாரிப்பது என்பது குறித்து தான் பார்ததாகவும், அதேபோல் நாமும் கள்ள நோட்டு தயாரிக்கலாம் என சுகுமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து யூ-டியூப்பில் வீடியோ பார்த்த சுகுமார் கள்ளநோட்டு தயாரிப்பதற்கான கருவிகளை வாங்கியுள்ளார். இக்கருவிகளை இயக்குவதற்கு ஆவாராங்காடு, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சக்தி(எ)சந்திரசேகரிடம் கேட்டுள்ளனர். சக்தி கருவிகளை இயக்குவதற்கு பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது அவர்கள் கள்ளநோட்டு தயாரிக்க சக்தியிடம் கேட்டுள்ளனர்.

 

Four people arrested

 

சக்தி அங்கிருந்து நைசாக வெளியே சென்றுவிட்டார். சுகுமார் சக்தியை மீண்டும் அழைத்தபோது வரமறுத்துள்ளார். தன்னிடம் உள்ள கம்ப்யூட்டர் பழுதடைந்துவிட்டதாகவும் அதனை சரி செய்து தரமட்டும் வந்துவிட்டு செல்ல சுகுமார் கேட்டுள்ளார். இதனையடுத்து பாப்பம்பாளையம் வந்த சக்தியை பிடித்து அடைத்து வைத்துள்ளனர். அவரை மிரட்டி கள்ளநோட்டு தயாரித்துள்ளனர். இதனையடுத்து தன்னை மிரட்டி அடைத்து வைத்துள்ளதாகவும், கள்ளநோட்டு தயாரிக்கப்படுவதாகவும் சக்தி வாட்சாப் மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் வாட்சாப் மூலம் சக்தி அனுப்பியிருந்த லோக்கேசனுக்கு சென்று அங்கிருந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு அச்சடிக்கப்பட்டிருந்த 400 நூறு ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்ததுடன் அங்கிருந்த சக்தி,சுகுமார், நாகூர் பானு மற்றும் ரமேஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். நவீன விஞ்ஞானம் வளர்ந்ததில் சட்டவிரோத செயல்பாடுகளும் அதன் மூலம் வளரத்தான் செய்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.