Skip to main content

பணத்திற்காக இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக பயன்படுத்தும் யூடியூப் சேனல்... நடவடிக்கை தேவை!

Published on 06/08/2021 | Edited on 07/08/2021

 

 YouTube channel misrepresenting children...

 

அண்மைக் காலமாகவே யூடியூப் போன்ற இணையங்களில் வியாபார நோக்கத்தோடு ஆபாசமான செய்திகள், பேச்சுக்களை பதிவுடுபவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது. அதன் அடிப்படையில் அண்மையில் பப்ஜி கேம் மூலம் பிரபலமான மதன் என்பவர் ஆபாசமாக பேசி வெளியிட்ட கேம் வீடியோவை அடிப்படையாகக்கொண்டு அவர் கைது செய்யப்பட்டதோடு அந்த சேனலும் முடக்கப்பட்டது. இதற்கு முன்பே பல மாதங்களுக்கு முன்பு 'சென்னை டாக்ஸ்' என்ற யூடியூப் சேனலில் கருத்துக்கேட்பு என்ற பெயரில் பொது இடங்களில் கூடும் இளைஞர்களிடம், பெண்களிடம் ஆபாசமாக கேள்விகள் கேட்கப்பட்டு ஆபாசமாக பதில்கள் பெறப்பட்டு வியாபார நோக்கத்தோடு ஆபாசமாக வெளியிடப்பட்ட வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.

 

youtube

 

இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இதேபோல் கண்ணில் சிக்காத பல யூடியூப் சேனல்கள் ஆபாசம் என்பதை மையமாகக் கொண்டு வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதில் ராபின் எஸ்ஜே என்பவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் ஆபாசமான கருத்துக்கள் கொண்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதிலும் யூடியூப் வீடியோவின் முகப்பு பக்கத்தில் வைக்கப்படும் 'தம்ப்நெய்ல்' எனப்படும் விடீயோவின் முகப்பு புகைப்படத்தில் சம்பந்தமே இல்லாத இளம்பெண்களின் புகைப்படங்களை வைத்ததோடு 'பணமும் உண்டு சுகமும் உண்டு' என்ற டைட்டிலோடு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

youtube

 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காவல்துறை தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்து வருகிறது. பாலியல் தொடர்பான விஷயங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகள், இளம்பெண்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று இருக்கும் நிலையில், சம்பந்தமே இல்லாத இளம்பெண்களின் புகைப்படங்களை அவருடைய வீடியோவின் முகப்பு பக்கத்தில் வைத்து ஆபாசமான தலைப்பையும் வைத்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல் மட்டுமல்லாது இதுபோன்று தவறான கண்ணோட்டத்தோடு வீடியோக்களை வெளியிடும் அனைத்து சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ராபின் எஸ்ஜே என்ற இந்த சேனலில் முழுவதுமாக பாலியல் வியாபாரம், ஆண் விபச்சாரம் உள்ளிட்ட முழுக்க முழுக்க ஆபாச விஷயங்கள் தொடர்பாகவே அந்த நபர் வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.