சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சிபெற்று பணி ஆணை கிடைக்கப் பெறாதவர்கள் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினர். இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சிபெற்றஅவர்களுக்கு சில காரணங்களால் பணி ஆணை வழங்கப்படவில்லை.
அதில், அவர்கள் மீது வழக்குகள் உள்ளன என குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தால் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபனம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்குப் பணி ஆணை வழங்க வேண்டும் என தேர்ச்சி பெற்றவர்களின் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.