Skip to main content

பெண் போலீஸின் கையை கடித்த இளைஞர்கள் கைது!!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021
Youths arrested for biting female police officer's hand

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசி. இவரது கணவர் திருஞானம் இவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். அதே காவல் நிலையத்தில் அவரது மனைவி எழிலரசி முதல் நிலை காவலராக பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் எழிலரசி தங்கள் சொந்த ஊரான இடைக்கட்டு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சின்ன வளையம் என்ற ஊர் அருகில் இளைஞர்கள் இருவர் சாலையில் நடுவில் நின்ற அப்படியே  கையை நீட்டி மறித்துள்ளனர்.

 

சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்திய பெண் போலீஸ் இளவரசி இந்த நேரத்தில் திடீரென்று இப்படி நடுரோட்டில் கையைக் காட்டி வழிமறிக்கலாமா என்று கேட்டுள்ளார். இதனால் அந்த இரு இளைஞர்களுக்கும் பெண் போலீஸ் இளவரசிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமான அந்த இரு இளைஞர்கள் இருவரும் அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து இளவரசி தலையில் அடித்துள்ளனர். நல்லவேளை இளவரசி ஹெல்மெட் போட்டு இருந்தார் அதனால் அவரது தலை தப்பியது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவர்களிடம் இளவரசி கோபமாக கேட்க அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் இளவரசியின் கை விரலை பிடித்து கடித்து விட்டான். இதனால் பெண் போலீஸ் இளவரசி கோபத்துடன் சத்தம் போட்டு இளைஞர்களிடம்  பேச அப்போது அவ்வழியே வந்தவர்கள் உதவியுடன் அந்த இளைஞர்கள் இருவரையும் இளவரசி துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.

 

அதோடு அவர்கள் இருவரையும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் ஜெயங்கொண்டம் நகரை சேர்ந்த வல்லரசு, பிரபாகரன் ஆகிய இவர்கள் இருவரும் மீன்சுருட்டி சாலையில் சின்ன வளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளனர். தங்கள் பணி முடித்து இரவு நேரம் என்பதால் ஜெயங்கொண்டம் செல்வதற்காக வழியே சென்றவர்களை நடுரோட்டில் நின்று லிப்ட் கேட்பதற்காக மறித்துள்ளனர். ஆனால் இருவரும் போதையில் இருந்ததால் பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து இருவரையும் ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இரவு நேரத்தில் பெண் போலீஸாரிடம் தகராறு செய்த இளைஞர்கள் இருவரையும் தன் கைவிரலில் கடிபட்டு  வலியிலும்  அவர்களை  துணிவுடன் துரத்தி சென்று கைது செய்த பெண் போலீஸ் இளவரசியை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் டூட்டி முடிந்து தன் ஊருக்குச் சென்ற பெண் போலீசிடம் வம்பு செய்து அவரது கையை கடித்த இளைஞர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.