Skip to main content

நண்பனுக்கே ஸ்கெட்ச் போட்ட கூட்டாளிகள்; ஏரிக்கரை சம்பவத்தால் உறைந்து போன மீஞ்சூர் மக்கள்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Youth who incident friend in Meenjoor

 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது ராமரெட்டிப்பாளையம் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் அஜித். 25 வயதான இவர் அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தைப் பாதுகாத்து வந்தார். இந்நிலையில், அஜித்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. ராமரெட்டிப்பாளையத்தில் இருக்கும் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம்.

 

அந்த வகையில், கடந்த 16 ஆம் தேதியன்று வீட்டில் இருந்த அஜித் அன்றிரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அஜித்தின் பெற்றோர், ராமரெட்டிப்பாளையத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில், பதற்றமடைந்த அஜித்தின் பெற்றோர் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று தனது மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் காணாமல் போன அஜித் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அஜித்தின் நண்பர்கள் யார்? அவர் கடைசியாக எங்கே சென்றார் எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். 

 

இத்தகைய சூழலில், ராமரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனிடையே, அந்த வழியாகச் சென்றவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த கிணற்றில் சோதனையிட்டபோது, அதில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.  இதையடுத்து, பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் அந்த ஆண் சடலத்தை மீட்டனர். அப்போது, அந்தப் பாழடைந்த கிணற்றில் சடலமாகக் கிடந்தவர் காணாமல் போன அஜித் தான் எனத் தெரியவந்தது. 

 

இதனிடையே, அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அஜித்தின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்துள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த அஜித்தின் பெற்றோர் அவரது உடலைப் பார்த்து கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். அதன்பிறகு, அஜித்தின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தக் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் சில இளைஞர்கள் கூட்டமாகச் சேர்ந்து மது அருந்தினார்கள் என அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான செல்போன் நம்பர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, போலீசார் சேகரித்த செல்போன் நம்பர்களில் அஜித்தின் நெருங்கிய நண்பரான நாகராஜின் செல்போன் நம்பரும் அதே டவரில் பதிவாகியிருந்தது.

 

இதையடுத்து, அஜித்தின் நண்பர்களான ராமரெட்டிப்பாளையம் பச்சையம்மன் நகரைச் சேர்ந்த 21 வயது நாகராஜ், வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் உள்பட மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், சம்பவத்தன்று அஜித் தனது நண்பர்களான நாகராஜ், மோகன், சாய், கணேஷ், வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் உள்பட அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அந்த நேரத்தில், மது போதையில் இவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென ஆத்திரமடைந்த நண்பர்கள் அஜித்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, அஜித்தின் கை கால்களைக் கட்டி உடலைக் கிணற்றில் வீசி விட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலையாளிகளான நாகராஜ், வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில், தலைமறைவாக உள்ள மேலும் 3 நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களைக் கைது செய்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். தற்போது, மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டிக்கொலை செய்து கிணற்றில் வீசியது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.