Advertisment

வனவிலங்குகளை தடுக்க வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பூமாலை கிராமத்தில் வசிப்பவர் மகாதேவன். இவரது நிலத்துக்கு அடிக்கடி யானை, மான், முயல், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் வந்து பயிர்களை மேய்ந்துவிட்டு சென்றுவிடுகிறதாம். இதனால் மகாதேவன் தனது விவசாய நிலத்தில் வனவிலங்கு நுழையாமல் இருப்பதற்காக மின்வேலி அமைத்து வைத்துள்ளார். இரவு நேரத்தில் மின்வேலியில் மின்சாரம் பாய்ச்சப்படுமாம்.

Advertisment

Youth stuck with electric wire

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் மகாதேவன் நிலத்தின் வழியாக தனது விவசாய நிலத்திற்கு சென்ற சந்தோஷ் என்ற இளைஞர் மார்ச் 3ஆம் தேதி விடியற்காலை மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனை சிலர் மறைக்கப்பார்த்துள்ளனர். அப்பகுதி இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அங்கு வந்த பள்ளி கொண்டா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்திருப்பதை அறிந்து மகாதேவனை போலீஸார் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Electric wire Youth
இதையும் படியுங்கள்
Subscribe