Skip to main content

இரவல் தர மறுத்ததால் பைக்கை கொளுத்திய இளைஞர்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

youth set the vehicle on fire

 

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள சிதம்பரம் சாலை பகுதியில் வசித்து வருபவர் பஷீர் என்பவரது மகன் 23 வயது பக்ருதீன். அதே ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அடி பள்ளம் தெருவில் வசித்து வருபவர் இதயத்துல்லா என்பவரது மகன் 18 வயது உவைஸ் முகமது.  இவரது வீட்டுக்கு முன்பு இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனமும், இவரது நண்பர் அலெக்ஸ் பாண்டியன் என்பவரது வாகனமும் என இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் விடிகாலை நேரத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இரவு நேரம் என்பதால் வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதிக வெளிச்சம் பரவியதை அடுத்து வீட்டிலிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு வாகனங்களும் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்ததை அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்து போக, மற்றொரு வாகனம் பாதி அளவு எரிந்த நிலையில் அணைக்கப்பட்டது.

 

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் பக்ருதீனை கைது செய்து செய்துள்ளனர். பக்ருதீன் சம்பவத்தன்று விடியக் காலை மூன்று மணி அளவில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் உவைஸ் முகமது வீட்டுக்குச் சென்று காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு மீண்டும் சுவர் ஏறிக் குதித்து தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது. 

 

அதன் அடிப்படையில் பக்ருதீனை கைது செய்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உவைஸ் முகமதுவிடம் இருசக்கர வாகனத்தை பக்ருதீன் இரவல் கேட்டுள்ளார். ஆனால் உவைஸ் முகமது தர மறுத்துவிட்டதால் கோபத்தில் இருவாகனங்களைக் கொளுத்தியதாக பக்ருதீன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆடு திருட்டு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்பதால் உவைஸ் முகமது தனது வாகனத்தைத் தராமல் மறுத்துள்ளார் வாகனம் தர மறுத்ததற்காக அந்த வாகனத்தை இரவு நேரத்தில் சென்று தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் ஜெயங்கொண்டம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.