Skip to main content

சில மணி நேரத்தில் மீட்கப்பட்டாராம் இளம்பெண்-போலிஸ் துறையிலேயே சந்தேகம்!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். தினமும் பணிக்கு கம்பெனி பேருந்தில் போய் வருகிறார். கடந்த 16ந்தேதி ஊரில் இருந்து அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு ஒரு உறவினர் வந்துள்ளார். அவரை அழைத்து வருவதற்காக வாலாஜா பேருந்து நிலையத்துக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு சென்றுள்ளார். இரண்டு இருச்சக்கர வாகனத்தில் அவரும், உறவினரும் மாந்தாங்கள் வழியாக அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

Youth rescued in a few hours - suspicion in the police department!



மாந்தாங்கள் அருகே இரண்டு இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனத்தை மறித்து அவர்களை தாக்கிவிட்டு செல்போன் மற்றும் பணம், இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டதோடு, வாலாஜா அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணையும் அந்த கும்பல் கடத்திக்கொண்டு சென்றுள்ளது.

இந்த தகவல் விட்டுச்சென்ற உறவினர் மூலமாக அவரது குடும்பத்தார்க்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் வாலாஜா காவல்நிலையத்துக்கு தகவல் கூறியதாகவும், உடனடியாக களத்தில் இறங்கிய வாலாஜா போலிஸார், சில மணி நேரத்திலேயே திருத்தணியை சேர்ந்த 24 வயதான ஜாகீர்உசேன், 21 வயதான சம்சுதின் இருவரை கைது செய்தனர். அவர்கள் கடத்திய இளம்பெண்ணை மீட்டுள்ளனர். அதோடு, அவர்கள் பறித்துச்சென்ற பைக், நகை, பணத்தை மீட்டதாக வேலூர் மாவட்ட போலிஸார் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதோடு, துரிதமாக செயல்பட்டு இளம்பெண்ணை மீட்டதாக வாலாஜா உதவி ஆய்வாளர் சிவங்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுபதி உட்பட 5 போலிஸாருக்கு ஜீன் 17ந்தேதி மதியம் எஸ்.பி பிரவேஷ்குமார் பாராட்டி சன்மானமும், சான்றிதழும் வழங்கியுள்ளார் என்கிறது அந்த செய்திக்குறிப்பு.

கடத்தப்பட்டதாக புகார் வந்த சில மணி நேரத்தில் அந்த இளம்பெண்ணை காவல்துறை மீட்டுள்ளது மற்றும் அதோடு, அதே வேகத்தில் மீட்பு படையில் இருந்த காவலர்கள், எஸ்.ஐக்கு பாராட்டி சன்மானம் வழங்கியுள்ளது காவல்துறையிலேயே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் அந்த இளம்பெண் அவ்வளவு முக்கியமானவரா என்கிற கேள்வி காவல்துறையிலேயே எழுந்து பரபரப்பாக விவாதிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.