Skip to main content

காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இளைஞர் வெட்டிக் கொலை

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Youth passes away in thirupatur police arrested father and son

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் என்பவரின் மகன் ஜெயபிரகாஷ்(22). இவர் பெரியவரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் பணிக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர், வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில், தான் வளர்த்து வரும் காளைக்குத் தீவனம் வைத்துவிட்டுத் திரும்பியுள்ளார். அப்போது ஜெயபிரகாஷை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த அவரைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி. புஸ்பராஜ், டி.எஸ்.பி சரவணன் மற்றும் உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். 

 

ஜெயபிரகாஷின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் சடலத்தை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவல்துறையினரிடம் ‘கொலையாளியை கைது செய்யும் வரை சடலத்தை கொடுக்கமாட்டோம்’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 3  மணி நேரத்திற்கும் மேலாக  அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இளைஞரை வெட்டிவிட்டுத் தப்பியோடிய மர்ம நபர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறோம் என உறுதி அளித்த பின்னர் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 

அதன்பின் சடலம் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயபிரகாஷ், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? காதல் பிரச்சினையா? அல்லது அவரது கொலைக்கு வேறு ஏதும் காரணமா என போலீஸார் தீவிரமாக  விசாரணை மேற்கொண்டு, கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது மகன் மாணிக்கம் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

ராஜ்குமார் என்பவர் சீட்டு நடத்தியுள்ளார். ஜெயபிரகாஷ் குடும்பத்தார் அந்த சீட்டில் பங்கேற்றுள்ளனர். இதில், சீட்டு பணத்தை தவணை முடிந்தும் ராஜ்குமார் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் அவரது தந்தை மோகன் இருவரும் ராஜ்குமாரிடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். அங்கு இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு சிறு அடிதடி ஆகியுள்ளது. இந்த கோபத்தில் ராஜ்குமார் மகன் மாணிக்கம், ஜெயபிரகாஷை வெட்டிக் கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மாணிக்கத்தின் தந்தை ராஜ்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.