Skip to main content

செல்போனால் உயிரிழந்த இளைஞர்...

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Youth passes away by cell phone ...

 

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது சஞ்சீவிராயன் பேட்டை. இந்த ஊரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் ராஜசேகர் வயது 25 அப்பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்ததாகவும் இவர் குடியிருந்த வீட்டின் அருகே கிணறு ஒன்று இருந்துள்ளது. 

 

அந்த கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து நீண்ட நேரம்செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார் போதையில் இருந்ததாலும் தூக்க கலக்கத்தினாலும் செல்போன் பேசியபடியே தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். நீண்ட நேரம் அவரை காணாததால் அப்பகுதியில் இருந்த அவரது உறவினர்கள் தேடிப் பார்த்தபோது கிணற்றுக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது. 

 

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து ராஜசேகரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். தங்களை மறந்து செல்போனில் சுவாரசியமாக பேசிக்கொண்டு எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து ராஜசேகர் போன்று செல்போன் பேசிக்கொண்டே விபத்தில் சிக்கிக் கொள்வதும் ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு நடந்துகொண்டு செல்பி எடுக்கும் மோகத்தில் பலர் ரயிலில் அடிபட்டும் நீர்நிலைகளில் விழுந்தும் இறந்து போகிறார்கள். 

 

சிலர் டூவீலர் ஓட்டிக்கொண்டே செல்பி எடுத்து விபத்தில் இறந்தவர்களும் உண்டு. செல்போன், மனிதர்களின் தொடர்புக்கு இன்றியமையாதது அதே நேரத்தில் அதில் முற்றிலும் தங்களை மறந்து அதில் மூழ்கி உயிரை விடுகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்குப் பிறகு ஷாக் கொடுக்க இருக்கும் சிம்கார்டு நிறுவனங்கள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
SIM card companies to give a shock after the election

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடிந்த கையோடு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டண உயர்வு 15 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

ரூபாய் 208 ஆக உள்ள பார்த்தி ஏர்டெலின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 2027 இறுதியில் ரூபாய் 286 என உயரும் என கூறப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம் பார்த்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.