Skip to main content

மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டதால் ஆத்திரம்; வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொன்ற நண்பர்கள்!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

youth passed away police arrested two

 

ஓசூர் அருகே சூதாட்டத்தில் தன்னை வென்ற நண்பர்களிடம் மதுபானம் 'டிரீட்' கேட்டதால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள காரப்பள்ளியைச் சேர்ந்தவர் மோகன் (27). கூலித்தொழிலாளி. சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உமேஷ் (24) மற்றும் மூர்த்தி (20). இவர்கள் மூவரும் நண்பர்கள். யுகாதி பண்டிகை நாளான மார்ச் 22ம் தேதி, இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்று பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். சூதாட்டத்தில் உமேஷ், மூர்த்தி ஆகியோரிடம் 20 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி மோகன் தோற்றுவிட்டார். 

 

பணத்தை இழந்த விரக்தியில் மோகன், அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் உமேஷ், மூர்த்தி ஆகிய இருவரும் அதே கடைக்குச் சென்றனர். அவர்களைப் பார்த்த மோகன், சீட்டாட்டத்தில் தன்னுடைய பந்தய பணத்தை ஜெயித்ததால், அதிலிருந்து தனக்கு மதுபானம் வாங்கி 'டிரீட்' கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மதுபானம் வாங்கித் தர மறுத்ததோடு, மோகனை ஆபாசமாகப் பேசியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. 

 

அப்போது ஆத்திரம் அடைந்த உமேஷ், மூர்த்தி ஆகிய இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஒளித்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகனை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் மோகன் சரிந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். 

 

நிகழ்விடத்தில் இருந்தவர்கள் மோகனை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 23ம் தேதி காலை மோகன் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக உமேஷ், மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.