Skip to main content

கோவையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

Youth commits suicide by hanging in Coimbatore ..!

 

 

கோவை  சூலூர் பள்ளபாளையம் நஞ்சப்பத்தேவர் நகரைச் சேர்ந்த  கூலித்தொழிலாளி அசோகனின் மகன் கிருஷ்ணகுமார் ...(23) பள்ளபாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது வீட்டின் விட்டத்தில் நிர்வாணமாய்  எப்படி தொங்கிக்கொண்டிருந்தான்? என சூலூர் மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

 

சூலூர் காவல் நிலையப் போலீஸ் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகாலிங்கம் தனது மனைவியுடன் குடி இருக்கும் வீடு மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வீடு. அந்த மணிகண்டனின் நண்பன் தான் கிருஷ்ண குமார்.

 

தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணி செய்து கொண்டிருந்த கிருஷ்ண குமாருக்கு. கரோனா காலத்தில் பேருந்துகள் இயங்காததால் வேலையில்லை. அதனால் மணிகண்டன் வீட்டிற்கு அடிக்கடி கிருஷ்ண குமார் வந்து செல்லும்போது ரங்க நாயகியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது.

 

இதை மகாலிங்கத்தின் உறவினர்கள் அடிக்கடி பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ரங்கநாயகியின் வீட்டிற்குள் கிருஷ்ண குமார் நுழைந்ததை கண்டு கொண்டனர் உறவினர்கள். உடனே கதவை வெளியே  பூட்டி விட்டனர். அச்சத்தில் உறைந்துபோக ஆரம்பித்து விட்டார்கள்.

 

பின்னர் ரங்கநாயகி எப்படியோ வீட்டிற்கு வெளியே வந்துவிட, வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட கிருஷ்ண குமார் வெளியே போனால் மானம் போய் விடுமே என நினைத்து தூக்கிட்டு கொண்டான். விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

 

உடற்கூராய்வு செய்ய கிருஷ்ண குமாரின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி இருக்கும் சூலூர் போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணையை நீட்டித்து இருக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம் போலிப்பாசம்” - முதல்வர் விளாசல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Everything that the PM says about liking Tamilnadu is hypocrisy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், “கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?. தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?. கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?. தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம். வெறும் வெளிவேடம். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.