Skip to main content

செவிலியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது!  

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Youth arrested who made trouble to nurse

 

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா தலைநகரம் எனும் ஊரில் ஒரு அரசு மருத்துவமனை உள்ளது. செந்துறை தாலுகாவைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையை உபயோகப்படுத்திவருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், செவிலியராக பணியாற்றிவருகிறார். 

 

நேற்று முன்தினம் மதியம் செந்துறை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வசித்து வரும் விஜய பாரதி என்ற இளைஞர் மருத்துவமனைக்குள் வந்து அங்கும் இங்கும் நோட்டமிட்டுள்ளார். இதை கவனித்த அந்த செவிலியர், அவரிடம் என்ன வேண்டுமென விசாரித்துள்ளார். அப்போது விஜய பாரதி, தனது அண்ணன் பெயரை கூறி “மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அவரை பார்ப்பதற்காக வந்து தேடுகிறேன்” என்று கூறியுள்ளார். அப்போது செவிலியர், அவர் சிகிச்சை முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறி இளைஞரை அனுப்பியுள்ளார்.


அதே நாள் இரவு, மீண்டும் மருத்துவமனைக்கு வந்த விஜய பாரதி, அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, பணியிலிருந்த அதே செவிலியரிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டுள்ளார். அந்த செவிலியர் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து தூக்கத்திலிருந்து எழுந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள், அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 


அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார், அந்த இளைஞரை கைது செய்தனர். செவிலியர் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது