Skip to main content

நாமக்கல் ரியல் எஸ்டேட் தரகர் கொலை வழக்கில் வாலிபர் கைது

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Youth arrested in Namakkal real estate broker incident

 

நாமக்கல் அருகே, காரில் சென்று கொண்டிருந்த ரியல் எஸ்டேட் தரகரை வழிமறித்து கொலை செய்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

நாமக்கல் ஜெய் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (45). ரியல் எஸ்டேட் தரகர். ஜூலை 19ம் தேதி இரவு, டாஸ்மாக் பாரில் அமர்ந்து மது குடித்த இவர், நள்ளிரவுக்கு மேல் தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

 

திருச்சி சாலை ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அவருடைய காரை வழிமறித்த வாலிபர் ஒருவர், குமரேசனை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

 

இச்சம்பவம் குறித்து நாமக்கல் நகர காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இரண்டு நாட்களாக துப்பு கிடைக்காமல் தடுமாறிய காவல்துறையினர், சந்தேகத்தின்பேரில் நாமக்கல் ஜெய் நகரைச் சேர்ந்த நவீன் (25) என்ற இளைஞரை வியாழக்கிழமை (ஜூலை 21) காலையில் பிடித்து விசாரித்தனர்.

 

சம்பவத்தன்று இரவு, குடிபோதையில் காரை ஓட்டி வந்த குமரேசன், கொலை நடந்த இடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நவீனை பார்த்து, சாலையில் ஒழுங்காக நடந்து போடா... என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நவீன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமரேசனை குத்திக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

 

எனினும், கொலையாளியைப் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணையின்போது, கொலையுண்ட குமரேசன் சம்பவத்தன்று இரவு, நண்பர் ஒருவருடன் மது அருந்துவிட்டு அவருடன் காரில் வீடு திரும்பியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் குமரேசனை உடன் வந்த நண்பரே குத்தி கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

 

தற்போது பிடிபட்டுள்ள நவீன், எப்போதும் தன்னுடன் கத்தி வைத்துக்கொண்டு சுற்றக்கூடியவரா, அவர் மீது காவல்நிலையங்களில் வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனவா, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடந்துவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.