Skip to main content

மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்!! உருக்கத்துடன் வாழ்த்திய தம்பிராமையா..! 

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

Youngsters who paid homage to the wisdom of planting saplings Thambiramaya who greeted

 

நடிகரும் சூழலியல் ஆர்வலருமான விவேக் மறைவை யாராலும் ஏற்க முடியவில்லை. கலாம் கண்ட கனவுகளை நிறைவேற்ற, ‘கிரீன் கலாம்’ திட்டம் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை லட்சியமாக கொண்டு இளைஞர்களையும், மாணவர்களையும் அழைத்தார். செல்லுமிடமெல்லாம் மரக்கன்றுகளை நட்டார். எந்த ஊரில் யார் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தாலும் அவர்களைப் பாராட்டவும் செய்தார்.

 

அதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், நீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை அறிந்து ட்விட்டரில் பாராட்டினார் நடிகர் விவேக். மேலும் அவர் கொத்தமங்கலம் வருவதாகவும் கூறியிருந்தார். கரோனா ஊரடங்கால் அந்தப் பயணத் திட்டம் ரத்தானது. இந்த நிலையில் சனிக்கிழமை நடிகர் விவேக் மறைந்த தகவல் அறிந்து துடித்துப் போன கொத்தமங்கலம் இளைஞர்கள், பெரியாளூர் குருகுலம் பள்ளி மாணவர்கள் சில மணி நேரங்களிலேயே விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

 

Youngsters who paid homage to the wisdom of planting saplings Thambiramaya who greeted

 

மேலும் பலரது வீடுகளிலும் நடுவதற்கு மரக்கன்றுகள் கொடுத்ததுடன், விவேக்கின் லட்சியம் நிறைவேற அவர் மண்ணுக்குள் புதைக்கப்படுவதற்குள் மரக்கன்றுகளை நடுவோம் என்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்த செய்தி நக்கீரன் இணையத்தில் வீடியோவாகவும் படங்களுடன் செய்தியாகவும் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சின்னக்கலைவாணருக்கு அஞ்சலி செலுத்தி அவரது லட்சியத்தையும் நிறைவேற்றினார்கள். 

 

இந்த செய்திகளையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா, ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், “இறைநிகர் கலாம் அவர்கள் பெற்றெடுக்காத பெருமகர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் சமூகப் பற்றுதான் கலாம் அவர்களின் கனவான பசுமையைக் காக்க வேண்டும் என்பது. கலாமின் செல்வபுத்திரனைக் காலம் கடத்திச் சென்றுவிட்ட அன்றைய தினமே, என்னை இந்தப் பூமிக்குத் தந்த என் புதுக்கோட்டை மாவட்ட கொத்தமங்கலம் இளைஞர்கள் பசுமைக் கன்றுகள் நட்டு ஊடகத்தில் பேசு பொருளாக மாறினீர்கள். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள், என் அன்பிற்கினிய கொத்தமங்கலம் இளைஞர்களை நான் வணங்கி வாழ்த்துகிறேன். ப்ரியமுடன் உங்கள் தம்பி ராமையா..” என்று உருக்கமாக பேசியுள்ளார். இந்த ஆடியோ வேகமாக பரவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர்.