Skip to main content

தலை விரித்தாடும் போதை கலாச்சாரம்.. வாலிபர் பலி

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

Youngster passed away in trichy

 

திருச்சி மேலச் சிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் ஜாவித் (வயது 24) கார் டிரைவர். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜாவித்தின் பால்ய நண்பர் ஆசிக் பாட்ஷா (21). இவர்களது நண்பர்கள் உப்புப்பாறையை சேர்ந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகிய அனைவரும் தென்னூர் உழவர் சந்தை அருகே சம்பவத்தன்று இரவு ஒன்று கூடினர்.

 

இவர்கள் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர்கள், போதை ஊசி போட்டுக் கொள்வதற்காக, ஒரு மாத்திரை, 300 ரூபாய் என மொத்தம், 1,500 ரூபாய் பணத்தை கொடுத்து 5 போதை மாத்திரைகளை வாங்கி வந்துள்ளனர். டிஸ்டில்டு வாட்டர் (வடிநீர்) கொண்டு மாத்திரையை கலக்கி, அந்த கரைசலை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளனர்.

 

செலுத்திய சில நிமிடத்தில் ஜாவித், சுருண்டு மயங்கி விழுந்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போதை நண்பர்கள், அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஜாவித் மரணம் குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'கேன்ஸர் (புற்றுநோய்) நோயாளிகளின் கொடூரமான உடல் வலிக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையை தான் இவர்கள் போதைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து, 3 மணி நேரம் முதல், 5 மணி நேரம் வரை, நீடிக்கும் போதைக்காக, ஜாவித் உள்ளிட்ட ஐந்து பேரும், தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ராம்நாத் என்பவரிடம் இருந்து, ஒரு மாத்திரை 300 ரூபாய் கொடுத்து ஐந்து மாத்திரைகள் வாங்கி இருக்கின்றனர்.

 

அதையடுத்து, போதை மாத்திரை சப்ளையர் ராம்நாத், ஜாவித்தின் நண்பர்கள், ஆசிக், அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவுச் செய்தனர். ராம்நாத் (32), ஆசிக் பாட்ஷா (21) ஆகியோரை கைது செய்தனர். ராம்நாத்திடம் இருந்து, 18 போதை மாத்திரைகள், ஒரு போதை மருந்து பாட்டில், ஒரு ஊசி மற்றும், 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது