Skip to main content

செல்போனில் பாலியல் தொந்தரவு...ஆத்திரத்தில் வெட்டிக் கொலை செய்த இளம் பெண்...!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

உத்தமபாளையம் அருகே செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரியை இளம் பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

 

 Younger woman killed businessman near Theni

 



தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே  இருக்கும் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் உறவினர்  பாண்டீஸ்வரன். அவரது மனைவி நிரஞ்சனா. இவர்கள்  ஒத்த பட்டியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் மணிகண்டன்  கடந்த சில நாட்களாகவே நிரஞ்சனா வுக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் நிரஞ்சனாவுக்கு  மன உளைச்சல் ஏற்பட்டது. மேலும்  நிரஞ்சனா  பற்றி  தவறாக மணிகண்டன் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இந்த விஷயம் கணவர் பாண்டீஸ்வரனுக்கு தெரிய வர, அவர் நிரஞ்சனாவிடம் இதுகுறித்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் ராயப்பன்பட்டியிலுள்ள மணிகண்டன் வீட்டுக்குச் சென்று மணிகண்டனிடம்  இருவரும் இதுதொடர்பாக கேட்டுள்ளனர் ஆனால் அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிரஞ்சனா மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்ததும் பாண்டீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் நிரஞ்சனா அருவாளுடன்  ராயப்பன்பட்டி போலீசில் சரண் அடைந்தார். 

பின்னர் போலீசார் விரைந்து சென்று  மணிகண்டன் உடலை கைப்பற்றி உத்தமபாளையம்  அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் நிரஞ்சனாவை போலீசார் கைது செய்தனர்.அதோடு தப்பி ஓடிய கணவர் பாண்டீஸ்வரனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான நிரஞ்சனா தனக்கு மணிகண்டன் செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.