Skip to main content

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி; உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

young man passed away his girlfriend alive in Tirupur

 

19 வயது இளம்பெண்ணான கங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கங்காவின் தாய், தந்தை இறந்துவிட திருப்பூர் ராயர்பாளையத்தைச் சேர்ந்த தனது தாய் மாமா இப்ராகிம் சாகரின் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். மேலும், தனது அக்காவுடன் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு லோகேஷ் என்ற 22 வயது இளைஞரிடம் கங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இவர்கள் இருவரும், யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்துப் பழகி வந்தனர். நாளடைவில் இவர்களின் காதல் விவகாரம் கங்காவின் வீட்டிற்குத் தெரிய வந்தவுடன் மூன்று மாதத்திற்கு முன்பு லோகேஷை வீட்டிற்கு அழைத்து கண்டித்துள்ளனர். அப்போது அங்கிருந்த கங்கா, ''நீ என்னை என்ன பண்ணுனேன்னு சொல்லு... இப்ப நீ சொல்றியா... இல்ல நா சொல்லட்டுமா எனக் கேட்டுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த லோகேஷ், இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

இதனால், மனம் இறங்கிய கங்கா குடும்பத்தார், "அவ சின்ன பொண்ணு... நீயும் சின்ன பையன்தான்... இனிமே நீங்க ரெண்டு பேரும் பேசக்கூடாது" என சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, வேலைக்குச் செல்லாமல் இருந்து கடந்த 4 நாட்களாகத் தான் வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதியன்று பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் லோகேஷும் கங்காவும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது லோகேஷ், கங்காவிடம் தவறாக நடந்துகொண்ட பிறகு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கங்கா வற்புறுத்தியுள்ளார்.

 

இதனால், விரக்தியடைந்த லோகேஷ் கீழே கிடந்த கல்லை எடுத்து கங்காவின் தலையில் அடித்ததோடு தனது பெல்ட்டில் இருந்த பக்கில்ஸால் தொடைப் பகுதியைக் காயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், லோகேஷ் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை கங்கா மீது ஊற்றிவிட்டு இதோடு நீ செத்து தொலைடி என வேகமாக கத்திவிட்டு, அந்தப் பெண்ணை உயிரோடு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, கீழே விழுந்து லோகேஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலில் தீக்காயங்களுடன் இருந்த கங்காவை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கங்கா கடந்த 4ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும், விபத்தில் காயமடைந்த லோகேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதுகுறித்து, கங்காவின் அத்தை உஷா நம்மிடம் பேசும்போது, "எங்க பாப்பாவுக்கு ஆதார் கார்டு கூட இல்ல. அவள எரிச்ச இடத்துல போதைப் பொருள் இருந்துச்சின்னு போலீஸ் சொல்றாங்க. அந்தப் பையன சும்மா விடக்கூடாது. எங்க குழந்தைய ஏமாத்தி கொன்னுட்டான். அவன தூக்குல போடணும்" என கண்ணீரோடு பேச்சை முடித்துக்கொண்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.